கொரோனா பாதிக்கப்பட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு தீவிர சிகிச்சை
கொரோனா நோய் பாதிப்பு அதிகமாகியுள்ளதால் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: கொரோனா பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து சகாயத்திற்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் அரசியல் பேரவை என்ற அமைப்பு தொடங்கினார். நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் 20 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தார்.
அரசியல் பேரவையின் வேட்பாளர்களுக்காக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் சகாயம். சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த உடன் அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்படவே கடந்த 6ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனாவை சாதாரணமாக நினைக்காதீர்கள்... ஒருவர் கூட இறக்கக்கூடாது என போராடுகிறோம் - முதல்வர்
அங்கு சகாயத்துக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 8 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து சகாயத்திற்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.