International Yoga day: தினசரி யோகா.. தீராத ஆரோக்கியம்.. செம்மையான வாழ்க்கை!
சென்னை: யோகாசனம்.. நமது வாழ்க்கையின் அன்றாடமாக இதை கைக் கொண்டவர்களுக்கு ஆரோக்கியத்திற்குக் குறைவிருக்காது. சக்திக்குக் குறைவிருக்காது.. மன அமைதிக்கும் பஞ்சமே இருக்காது.
உலகுக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்த பாரம்பரியம் இந்தியாவுக்கு உண்டு. அத்தகைய பாரம்பரியத்தில் ஒன்றுதான் இந்த யோகாசனம். அருமையான உடற்பயிற்சி மட்டுமல்ல.. மனதுக்கு வலிமையையும், அமைதியையும், சாந்தத்தையும் தரும் அற்புதக் கலையும் கூட.
தினசரி எதைச் செய்கிறோமோ இல்லையோ நிச்சயம் யோகாசனம் செய்ய வேண்டும். அதுவும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் யோகாசனம் நமக்கு வெகுவாக கை கொடுக்கும்.. ஆமாங்க, மூச்சுப் பயிற்சிக்கு யோகாவை விட சிறந்த கலை என்ன உள்ளது, சொல்லுங்கள்.
சர்வதேச யோகாசன தினத்தை இன்று நமது நாடு மட்டுமல்ல பல்வேறு உலக நாடுகளிலும் கூட கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், கரூரைச் சேர்ந்த சிறுமி தாரணி ரவிக்குமார் அருமையான யோகாசனக் கலைஞராக உருவெடுத்து வருகிறார். எதிர்காலத்திலத் மிகப் பெரிய யோகாசன ஆசிரியராக வர வேண்டும் என்பதே இவரது கனவு.
"பச்சை மலை சாமி".. அப்பா பாட.. மகன் ரசிக்க.. இன்னிக்கு சாயந்திரம் மறந்துடாதீங்க
7வது படித்து வரும் தாரணி செய்துள்ள யோகாசன வீடியோ நம்மை வெகுவாகக் கவர்ந்தது. பல்வேறு சின்னச் சின்ன ஆசனங்களை இவர் செய்து காட்டுகிறார். நீங்களும் பாருங்கள்.. உரிய ஆலோசனையுடன் இதை நீங்களும் கூட செய்து பார்க்கலாம். சின்ன சின்ன யோகாசனங்களை செய்து பார்த்த பின்னர் மற்ற ஆசனங்களையும் கூட செய்யலாம்.
உடலுக்கும் நல்லது, மனதுக்கும் நல்லது.. யோகா செய்வோம்.. ஆரோக்கியமாக வாழ்வோம்.