பைக்கிற்கு பெட்ரோல் போடுங்க.. சொகுசு காரை ஓட்டிச் செல்லுங்க.. ஐஓசியின் சூப்பர் டூப்பர் ஆஃபர்
சென்னை: ரூ 200-க்கு பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்களுக்கு அறுபது நாட்களில் காத்திருக்கும் சொகுசு கார் பம்பர் பரிசு பெறுவது நீங்களாகவும் இருக்கலாம்... என இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் சார்பில் நடத்தப்பட்ட அறுவடை 60 விழாவில் அறிவிப்பு வெளியானது.
Recommended Video
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் விற்பனையை மேம்படுத்த வரும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன் அடிப்படையில் சேலம் மண்டல இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் சார்பில் விற்பனை மேம்படுத்துவதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் ஏ வி ஆர் ரவுண்டானா அருகில் உள்ள வாயில் பெட்ரோல் பங்கில் நடைபெற்றது.
தெறிக்கவிட்ட அதிமுக.. பீச்சில் சத்தியம் செய்துவிட்டு போன சசிகலா... ரிட்டர்ன் ஆனா என்னல்லாம் நடக்குமோ
60 நாட்கள்
60 நாட்களில் ரூ 200 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒரு நபருக்கு சொகுசு கார் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3000 பேருக்கு பரிசு
மேலும் இரண்டாவது பரிசாக இரண்டு நபர்களுக்கு 10 ஆயிரம் வீதமும், மூன்றாவது பரிசாக 60 நபர்களுக்கு 1000 ரூபாய் வீதமும், நான்காம் பரிசாக ஆயிரம் நபர்களுக்கு டைட்டன் மூக்கு கண்ணாடியும் ஐந்தாம் பரிசாக 3000 நபர்களுக்கு முகக் கவசம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள்
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் முதன்மை மேலாளர் சரத்பாபு முதுநிலை மேலாளர் அப்பன் டிராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சேலம் மண்டல பொது மேலாளர் சிவக்குமார் கலந்துகொண்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த பம்பர் பரிசுகளை அறிவித்தார்.
பரிசுகள்
இதனால் இனி ரூ 50-க்கு பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்கள் ரூ 200-க்கு பெட்ரோல் போட்டாலும் போடுவர் என்கிறார்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள். மேலும் 60 நாட்களில் பெட்ரோல் போடும் அதிர்ஷ்டசாலிகளுக்கு கார் இல்லாவிட்டாலும் ஏதேனும் பரிசுகள் வழங்கப்படுகிறது.