ராமநாதபுரம் முன்னாள் எஸ்பி வருண்குமார்.. சென்னைக்கு பணியிட மாற்றம்.. புதிய பொறுப்பு!
சென்னை: காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராமநாதபுரத்தின் முன்னாள் எஸ்பி வருண்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன் ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் இடம் மாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதோடு ராமநாதபுரம் எஸ்.பி பொறுப்பில் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாதபுரத்தில் அருண் பிரகாஷ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு பின் மத ரீதியான காரணங்கள் இருக்கலாம் என்று சமூக வலைத்தளத்தில் வதந்தி பரவியது. இதையடுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எஸ்.பி வருண்குமார் சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்து இருந்தார்.
இது தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம், இது மத ரீதியான கொலை இல்லை, இதில் உரிய விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த விளக்கத்திற்கு பின் இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது பெரிய சர்ச்சையை எழுப்பியது.
மத்திய அரசு வேலைக்கான பணியிடங்களை நிரப்ப எந்த தடையும் இல்லை.. சர்ச்சை பற்றி நிதி அமைச்சகம் விளக்கம்
இந்த நிலையில் தற்போது ராமநாதபுரத்தின் முன்னாள் எஸ்பி வருண்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறையின் சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்கும் பதவிக்கு மாற்றம் செய்யபப்ட்டுள்ளார். சென்னை காவல்துறையின் தனியங்கி மற்றும் கணினிமயமாக்கல் துறை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.