நிலவின் சுற்றுப் பாதையில் சந்திரயான்-2.. 30 நிமிடம் ரொம்ப டென்ஷனாகிவிட்டோம்.. இஸ்ரோ தலைவர் சிவன்
Recommended Video
சென்னை: சந்திரயான் -2 புவி சுற்று வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுப் பாதையில் சேர்ந்தது டென்ஷனான 30 நிமிட நடவடிக்கை என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார்.
இன்று காலை 9.30 மணியளவில், நிலவின் சுற்றுப் பாதையில் சந்திரயான் -2 விண்கலம் செலுத்தப்பட்டது. இதன்பிறகு காலை 11.30 மணியளவில் நிருபர்களை சந்தித்தார் சிவன் அப்போது அவர் கூறியதாவது:
இது டென்ஷனான 30 நிமிட ஆபரேஷன். கடிகாரம் துடித்தது போலவே, டென்ஷனும், பதட்டமும் எங்களுக்கு கூடிக்கொண்டே இருந்தது. சந்திரயான் -2, நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டபோது, பெரிய நிம்மதியும் மகிழ்ச்சியும் அளித்தது.
நிலவை 18 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சந்திரயான் - 2 சுற்றி வருகிறது. நிலவை சந்திரயான் சுற்றி வரும் வேகம் படிப்படியாக குறைக்கப்படும்.
நாங்கள் மீண்டும் சந்திரனை சந்திக்க உள்ளோம். அடுத்த பெரிய நிகழ்வு செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்க உள்ளது. அப்போது, விண்கலத்திலிருந்து, லேண்டர் சுற்றுப்பாதையில் இருந்து பிரிக்கப்படும். செப்டம்பர் 3 ஆம் தேதி, லேண்டரின் அமைப்புகள் இயல்பாக இயங்குவதை உறுதிசெய்ய சுமார் 3 வினாடிகள் ஒரு சிறிய ஆபரேஷன் செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சக்சஸ்.. புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து பிரிந்து நிலவு சுற்றுவட்டப் பாதையை அடைந்தது சந்திரயான்-2
இந்தியாவின் முதல் சந்திரன் ஆய்வு சந்திரயான் -1 மூலம், 2008 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது 2வது மிஷன் ஆகும். இன்று நிலவின் சுற்றுப் பாதையில், சந்திரயான்-2 நுழைந்தபோது, இஸ்ரோ ஆய்வு மையத்தில் சுமார் 200 விஞ்ஞானிகள், மற்றும் அதிகாரிகள் கூடியிருந்தனர். வெற்றிகரமாக இந்த பணி நிறைவு பெற்றதுமே, ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி இந்த சாதனையை வரவேற்றனர்.