அரக்கோணம் அருகே திடீர் ஐடி ரெய்டு.. ரூ.1 கோடி பறிமுதல்.. சிக்கிய லுங்கி நிறுவன அதிபர்!
அரக்கோணம் அருகே வி.ஆர்.வி. லுங்கி நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது.
சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரக்கோணம் அருகே வி.ஆர்.வி. லுங்கி நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது.
இந்தியாவில் பல இடங்களில் தினமும் ஐடி ரெய்டு நடக்கிறது. அதேபோல் தமிழகத்தில் மீண்டும் வரிசையாக அடிக்கடி ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்த ரெய்டுகள் அதிகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரக்கோணம் அருகே வி.ஆர்.வி. லுங்கி நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது. மொத்தம் 20க்கும் அதிகமான அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.
4 தொகுதி இடைத் தேர்தல்.. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.. 2 மாஜி அமைச்சர்களுக்கு சீட்!
தேர்தல் நேரத்தில் இவர்களிடம் கணக்கில் வராத கருப்பு பணம் புழங்குவதாக புகார் வந்ததை அடுத்து இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. வி.ஆர்.வி. லுங்கி நிறுவன அதிபர் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் முறையான ஆவணம் இல்லாத ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று மேலும் சில இடங்களில் இதேபோல் ஐடி ரெய்டு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தல்... எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து.. இதை கிளிக் பண்ணுங்க தெரியும்!