தமிழிசை வெற்றி பெறுவது சந்தேகம் தான்... முதலமைச்சர் நாராயணசாமி ஆரூடம்
சென்னை: தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் வெற்றி பெறுவது சந்தேகம் தான் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசின் அனுமதியில்லாமல் மேல்முறையீடு செய்ய முடியாது என்ற அவர், அதற்கான நிதியை அமைச்சரவை ஒதுக்காது என்று தெரிவித்தார்.
கிரண்பேடி சொந்தப் பெயரில் சொந்தச் செலவில் மட்டும் மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். மேலும், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்றும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
வறண்ட ஏரிகள்.. குடிநீரின் பஞ்சத்தின் கோரப் பிடியில் சென்னை.. தண்ணீர் குடங்களுடன் வீதியில் மக்கள்
ஜிஎஸ்டியை கொண்டு வந்ததால் விலைவாசி உயர்ந்துள்ளதாகவும் கூறிய நாராயணசாமி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, புதுச்சேரி மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.