வெறும் புள்ளி விவரத்தை வைத்து பேசுவது தவறானது.. ப. சிதம்பரத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
சென்னை: மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. வெறும் புள்ளி விவரத்தை வைத்து பேசுவது தவறானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
முன்னதாக, தனது டிவிட்டர் பக்கத்தில் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதே நேரம், இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு என்பது வெட்கக்கேடு என்றும் குறிப்பிட்டார்.
மேலும், தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில், 1993 முதல் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மட்டும் 144 பேர் என்றும் புள்ளி விவரத்தை வெளியிட்டார். உயிரிழந்த 144 மனிதர்கள் எந்தச் சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்று விசாரித்துப் பாருங்களேன் என்றும் கூறியிருந்தார்.
இதுகூட தெரியலையேப்பா இருவருக்கு.. பாகிஸ்தான் அரசியல்வாதியை நக்கல் செய்யும் நெட்டிசன்கள்
இந்தநிலையில், சென்னை சைதாப்பேட்டை மீன் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ப.சிதம்பரத்தின் டிவிட்டர் பதிவு குறித்து பதிலளித்தார். அப்போது, மனித கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன என்றும், வெறும் புள்ளி விவரத்தை வைத்து பேசுவது தவறானது என்றும் கூறினார்.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தடுக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் இறப்பு சம்பவங்கள் நடப்பதில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.