வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு.. ஐடி ஊழியர் மரணம்!
Recommended Video
சென்னை: சென்னையில் ஆல்செக் டெக்னாலஜிஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.
வேளச்சேரி பஸ் நிலையம் அருகில் ஆல்செக் டெக்னாலஜிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது. நூற்றுக்கணக்கானோர் அங்கு பணியாற்றி வருகின்றனர். அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ஆனந்தன். இன்று வழக்கம் போல பணிக்கு வந்தார். வந்தவர், வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சிறிது நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.
தகவல் கிடைத்து வேளச்சேரி போலீஸார் விரைந்து வந்தனர். ஆனந்தன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்டவை காரணமாக ஆனந்தனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
ஜனவரியில் தமிழக சட்டசபை கூட்டம்... ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது!