8 வது மாடிக்கு ஏன் போனார் டெனிதா.. என்ன நடந்தது.. இளம் பெண் தற்கொலையில் பரபர தகவல்கள்!
Recommended Video
சென்னை: வேலையில் சேர்ந்த ஒரே நாளில் 8-வது மாடியில் இருந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருச்சியை சேர்ந்தவர் டெனிதா ஜீலியஸ். 24 வயதாகிறது. பிஏ ஆங்கிலம் டிகிரி முடித்திருக்கிறார். ஏற்கனவே வடபழனியில் ஒரு நிறுவனத்தில் வேலையில் இருந்தவர், அம்பத்தூர் ஐடி நிறுவனத்துக்கு வேலைக்கு அப்ளை செய்திருக்கிறார்.
கடந்த 18-ம் தேதிதான் இன்டர்வியூ நடந்துள்ளது. அன்றைய தினமே டெனிதா செலக்ட் ஆகி உள்ளார். பிறகு மறுநாளே வேலைக்கும் சேர்ந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் வேலை முடிந்தபிறகு, நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து திடீரென விழுந்து உயிரிழந்தார். இதை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசர் டெனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
2 நாளில் நல்ல செய்தி வரும்.. மகாராஷ்டிராவை வெல்வோம்.. பாஜகவுடன் இணைந்து.. உத்தவ் தாக்கரே
8-வது மாடி
ஆனால் இவர் வேலையில் சேர்ந்து ஒருநாள்தான் ஆனது என்பதால், இவரை பற்றி ஆபீசில் யாருக்குமே எந்த விவரமும் தெரியவில்லை. உண்மையிலேயே டெனிதா தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது தவறி விழுந்தாரா என்று தெரியாமல், 8-வது மாடிக்கு அந்த நேரத்தில் ஏன் போனார் என்றும் புரியாமல்தான் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவை கொண்டு விசாரணை ஆரம்பமானது.
பெற்றோர்
மேலும் ஐடி நிறுவன அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டெனித்தாவின் பெற்றோரிடமும், அம்பத்தூர் தொழிற்போட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான், ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
உடல்எடை
டெனிதா சற்று உடல் குண்டாக இருப்பாராம். அதனால், அடிக்கடி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இதைதவிர உடல்எடை உடைய உடற்பயிற்சிகளையும் செய்து வந்திருக்கிறார். இதற்கு முன்பு வேலை பார்க்கும் அலுவலகத்தில் கூட பெரும்பாலும் லிப்டை தவிர்த்து, படிக்கட்டுகளில் ஏறிதான் மாடிக்கு போவாராம்.
தவறி விழுந்தாரா?
அதன்படி நேற்றும் வேலை முடித்துவிட்டு, உடற்பயிற்சிக்காக படிக்கட்டு வழியாகவே 8 மாடி கட்டிடத்தில் ஏறி இறங்கி கொண்டு இருந்திருக்கிறார். அப்படி 8-வது மாடிக்கு சென்றுவிட்டு, திரும்பவும், படிக்கட்டு வழியாகவே இறங்கி கொண்டிருக்கும்போதுதான், தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், டெனிதாவின் மரணத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா, அல்லது தற்கொலையா என்ற விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது.