சென்னையில் விட்டு விட்டு ஜில் ஜில் மழை!
Recommended Video
சென்னை: சென்னை இப்படியே இருந்தால் எப்படி இருக்கும்.. ஜிலுஜிலு வென மழை பெய்து கொண்டிருக்கிறது. பார்ட் பார்ட்டாக... நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில்.
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று பிரேக் விட்டிருந்த மழை இன்று காலையில் மறுபடியும் ஆரம்பித்துள்ளது.
நகர்ப் பகுதிகளிலும், புறநகர்களிலும் ஆங்காங்கே விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. டோட்டலாக கிளைமேட்டே முற்றிலும் மாறிப் போயுள்ளது. குளுகுளுவென நிலவி வரும் சூழலில் மழையும் சேர்ந்துள்ளதால் குளுமையாக இருக்கிறது சென்னை மாநகரம்.
விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.. ஆனால் ஆர்பிட்டர்.. இஸ்ரோ சிவன்
வெப்பச் சலனம் நீடிப்பதால் ஒரு வாரத்திற்கு மழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதேபோல மழை தொடர்ந்தால் சென்னை நகரில் தண்ணீர்ப் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போதே சமீபத்திய மழையால் ஓரளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.