செப்.17-ம் தேதி காடுவெட்டி ஜெ.குரு நினைவு மணிமண்டபம் திறப்பு...!
சென்னை: மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான காடுவெட்டி குரு நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் இந்த மாதம் 17-ம் தேதி திறந்து வைக்கப்படுகிறது.
பா.ம.க.நிறுவனர் ராமதாஸின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவராக திகழ்ந்தவர் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு. நுரையீரல் தொடர்பாக ஏற்பட்ட பாதிப்பையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த ஆண்டு மே மாதம் காலமானார். அவர் மறைந்து ஒன்றே கால் வருடமாகியுள்ள நிலையில், அவருக்கு மணிமண்டபம் திறக்கப்படுகிறது.
குரு மறைந்தவுடன் அவரின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் காடுவெட்டியிலும், புதுச்சேரியிலும் பாமக சார்பில் இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், பா.ம.க சார்பில் குருவுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராமதாஸ் தொடங்கி வைத்தார். அதையடுத்து, கடந்த 8 மாதங்களில் அந்த மணிமண்டபம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
எந்த அறிவிப்பும் வேலைக்கு ஆகவில்லை.. தொடர்ந்து சரியும் சென்செக்ஸ், நிஃப்டி.. நிறுவனங்கள் அதிர்ச்சி
கும்பகோணம் -சென்னை சாலையில் உடையார்பாளையம் அருகே உள்ள காடுவெட்டியில், வன்னியர் கல்வி அறக்கட்டளை நிலத்தில் ஜெ.குருவுக்கு பிரமாண்டமாக மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் திறந்து வைக்கவுள்ளார்.
மூத்தப் பிள்ளையாக கருதிய ஜெ.குருவை மாவீரன் குரு என்று மருத்துவர் ராமதாஸ் அழைத்தது குறிப்பிடத்தக்கது.