அரசியல், சினிமாவில் கடுமையாக உழைத்தவர்.. உதவிக் கரம் நீட்டியவர் ரித்தீஷ்!
Recommended Video
சென்னை: அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் சாதிக்க நினைத்தவர் ரித்தீஷ்.
ராமநாதபுரத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த ஜேகே ரித்தீஷ் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 46. இலங்கை கண்டியில் கடந்த 1973-ஆம் ஆண்டு பிறந்தவர் ரித்தீஷ்.
பின்னர் 1976-இல் ராமேஸ்வரத்துக்கு அவரது குடும்பம் இடம்பெயர்ந்தது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ரித்தீஷ் ராமநாதபுரம் மாவட்டத்தில் முகமது சதாக் பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் படித்துள்ளார்.
நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மரணம்.. 2வது மருத்துவமனை டாக்டர்கள் உறுதி செய்தனர்
இவருக்கு 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு மனைவி ஜோதீஸ்வரியும் 10 வயதில் ஆரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர். சின்னப்புள்ள எனும் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் கானல் நீர் , நாயகன் பெண் சிங்கம், எல்கேஜி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
எல்கேஜி படத்தில் வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் வந்து அசத்தலாக நடித்திருப்பார். கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட ரித்தீஷ் ராமநாதபுரம் எம்பி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
பின்னர் திமுகவிலிருந்து விலகி கடந்த 2014-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். அவர் கடந்த 2011-ஆம் ஆண்டு நில அபகரிப்பு வழக்கில் சிறை சென்றிருந்தார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்து பணிகளிலும் முனைப்பு காட்டியவர்.