Jacto Geo: ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டது ஏன்? ஊழியர்கள் விளக்கம்!
ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டது ஏன் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டது ஏன் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த 9 நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. நாளையில் இருந்து பணிக்கு திரும்புவதாக அரசு ஊழியர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
சற்றுமுன் சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
என்ன விளக்கம்
அவர்கள் தங்கள் விளக்கத்தில், நாங்கள் மொத்தம் 9 கோரிக்கையை வைத்தோம். இது தொடர்பாக முதல்வரை அழைத்து பேச வேண்டினோம். ஆனால் அவர் எங்களை அழைக்கவில்லை. அதைத்தான் நாங்கள் கேட்டோம். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. நீதி அரசர்கள் கேட்டும் கூட அது நடக்கவில்லை.
கடுமையான நடவடிக்கை
வரும் பிப்ரவரி முதல் வாரம் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு தேர்வுகள் வருகிறது. இதனால் நீதிமன்ற கோரிக்கை, மக்களின் கோரிக்கை, மாணவர்களின் நலன் , அரசின் கோரிக்கை, பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கை ஆகியவற்றை நாங்கள் மதிக்கிறோம். இதனால் போராட்டத்தை கைவிடுகிறோம்.
இன்னும் இருக்கிறது
எங்கள் கோரிக்கை இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. எங்களில் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிலர் ஜெயிலில் இருக்கிறார்கள். இதை அரசு திரும்ப பெற வேண்டும். அரசு உடனடியாக இதை செய்ய வேண்டும்.
உடனே பேச வேண்டும்
முதல்வர் எங்களை அழைத்து பேச வேண்டும். பிரச்சனைகளை தமிழக முதல்வர் பேசி தீர்க்க வேண்டும். ஆனால் இதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. எங்கள் போராட்டம் எப்போதும் போல் உயிர்ப்போடு இருக்கும். தீர்விற்கு ஒரே வழி பேச்சுவார்த்தை மட்டும்தான்.
மீண்டும் வேலை
நாளை நாங்கள் வேலைக்கு திரும்புவோம். 2003ல் இருந்து நாங்கள் களத்தில் இருக்கிறோம். பல பிரச்சனைகளை நாங்கள் தீர்த்து இருக்கிறோம். இதையும் சரி செய்வோம். எங்களுக்கு இத்தனை நாள் ஆதரவு அளித்த அனைவர்களுக்கும், மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், என்று கூறியுள்ளனர்.