தூத்துக்குடி பெண்ணின் உடல் அடையாறு ஆற்றில் கண்டெடுப்பு.. தலைநகரில் தலையை தேடும் போலீஸ்
Recommended Video
சென்னை: சென்னையில் கை, கால்கள் வெட்டப்பட்டு பெருங்குடி குப்பைமேட்டில் வீசப்பட்ட பெண்ணின் உடல் அடையாற்றில் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் தேதி சென்னை பெருங்குடியில் குப்பைக் கிடங்கு உள்ள பகுதியில் ஊழியர்கள் மாலை குப்பைகளை பிரித்தாளும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு அரிசி மூட்டை பை கட்டப்பட்டிருந்தது.
அந்த பையை திறந்துபார்த்தனர். அதில் ஒரு பெண்ணின் கால்களும் , ஒரு கையும் இருந்தது. தகவலறிந்த பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த கை, கால்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணினுடையது என தெரியவந்தது.
இந்நிலையில் விசாரணை நடத்தியதில் அவரது கணவர் திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணனே குடும்பத் தகராறில் மனைவி சந்தியாவை கொலை செய்தது அம்பலமானது. இந்நிலையில் மற்ற பாகங்கள் எங்கே என விசாரிக்கப்பட்ட நிலையில் உடலை ஜாபர்கான்பேட்டைக்கும் ஈக்காட்டுதாங்கலுக்கும் இடையே உள்ள அடையாறு ஆற்றில் வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்ததை அடுத்து போலீஸார் அந்த உடல் பாகத்தை மீட்டனர்.
எனினும் சந்தியாவின் தலை அங்கு இல்லை. ஒரு வேலை தலை பகுதி வேறெங்காவது வீசப்பட்டதா, இல்லை ஆற்றில் அடித்து செல்லப்பட்டதா என்று கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.