மக்கள் ஊரடங்கை மீறி அதிகாலை முதலே இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்!
சென்னை: கொரோனா தடுப்புக்காக நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அமலை கடைபிடித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகாலை முதல் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. பின்னர் போலீசார் அந்த கடைகளை மூட உத்தரவிட்டனர்.
Recommended Video
கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் அனைத்து பொதுபோக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் சேவைகள், விமான சேவைகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் நாட்டின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
அனைத்து துறை கடைகளும் மூடப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே போலீசார் மட்டுமே ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பதை காண முடிகிறது. அதேநேரத்தில் நாடு முழுவதும் பல இடங்களில் அதிகாலை முதலே இறைச்சி கடைகள் திறந்திருந்தன. இந்த கடைகளில் கூட்டம் அலைமோதியது.
தொடங்கியது 14 மணி நேர மக்கள் ஊரடங்கு.. கடைகள் அடைப்பு, பேருந்து, ரயில்கள், ஆட்டோக்கள் ஓடாது
தமிழகத்தில் நாமக்கல் பகுதியில் ஒரு கடையில் ஒரு கிலோ கோழி கறி ரூ20க்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அங்கு மக்கள் நீண்ட கியூ வரிசைகளில் காத்திருந்து இறைச்சியை வாங்கி சென்றனர். பல இடங்களில் திருமணங்கள், சொற்ப எண்ணிக்கையிலான உறவினர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.