கொடி கட்டிய தொண்டனும் கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுக மட்டுமே- ஜெயக்குமார்
சென்னை: கொடி கட்டிய தொண்டனும் கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுகவில் மட்டுமே என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க அமைச்சர் ஜெயக்குமார் சென்றிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில் கீழ்மட்ட தொண்டர்களுக்கும் மதிப்பளிக்கும் கட்சி அதிமுக மட்டுமே. கொடி கட்டிய தொண்டனும், கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுகவில்தான்.
சட்டசபை நடப்பதால் நீட் மசோதா நிராகரிக்கப்பட்டது பற்றி கருத்து கூற முடியாது. என்னை ஏன் வறுத்தெடுக்கிறீர்கள். முகிலன் கடத்தப்பட்டாரா என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே தெரியும் என்றார் ஜெயக்குமார்.
Comments
English summary
Minister Jayakumar says that ADMK is the only party which gives respect to cadres.