ஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டள்ளது. ஆறுமுகசாமி ஆணையததின் அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் 5வது முறையாக அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். அவர் அதிமுகவில் இணைந்த பின்னர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் குறித்து அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதாவின் தனி உதவியாளர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், போயஸ்கார்டன் ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்களிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணையும் நடத்தியது.
டிடிவி தினகரனை ஆபாசமாக திட்டிய விவகாரம்.. அமமுகவில் இருந்து தங்கதமிழ்ச்செல்வன் நீக்கம்?
இதனிடையே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கைவிடுத்தது இந்த கோரிக்கை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் நிராகரித்தது. இதை எதிர்த்து உயர்நிதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை மனுதாக்கல் செய்தது. இந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றததில் அப்போலோ மருத்துவமனை மனுதாக்கல் செய்ததது. அப்போலோவின் மனுவை ஏற்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையும் விதித்தது.
இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மேலும் 4 மாதங்களுக்கு ஆணையம் விசாரிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2017ம் ஆண்டு முதல் நீட்டிக்கப்பட்டு வரும் விசாரணை ஆணையத்துக்கான காவ அவகாசம் 5வது முறையாக இப்போதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.