வடிவுக்கரசி வீட்டு கதவை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள்.. நகைகள் அபேஸ்
சென்னை: மூத்த நடிகை வடிவுக்கரசியின் வீட்டு பூட்டை உடைத்து, தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் மூத்த நடிகை வடிவுக்கரசி. இவர், தற்போது சின்னத்திரை நெடுந்தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
வடிவுக்கரசியின் வீடு, சென்னை பாண்டி பஜார் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் உள்ளது. இங்கு உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்தான் வடிவுக்கரசி வசித்து வருகிறார்.
இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்!
இதனிடையே தி.நகரில் மற்றொரு பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு கடந்த 10ஆம் தேதி வடிவுக்கரசி சென்றிருந்தார். வடிவுக்கரசியின் வீடு தொடர்ந்து பூட்டியிருப்பதை நோட்டமிட்ட திருடர்கள் அவரது வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
நேற்று இரவு குடியிருப்பின் காவலாளி இதை கவனித்து வடிவுக்கரசிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக வடிவுக்கரசி கொடுத்த புகாரின் பேரில், பாண்டிபஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.