என்னிடமும், கருணாநிதியிடமும் அளப்பரிய அன்பு காட்டியவர் ரித்தீஷ்: ஸ்டாலின் இரங்கல்
Recommended Video
சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் எம்பியான நடிகர் ஜே.கே.ரித்தீஷ்க்கு இன்று பிற்பகல் ராமநாதபுரத்தில் வீட்டில் இருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு மருத்துவர்கள் உயிரிழந்ததாக அறிவித்தனர்.
எல்கேஜி படத்துல இப்படியெல்லாம் நடிச்சாரே.... மறக்க முடியுமா ரித்தீஷை?
இந்நிலையில் வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட அவருக்கு மீண்டும் இதயத்துடிப்பு இருப்பதாக சிலர் சொன்னதால் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கும் ரித்தீஷ் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது..
நடிகராகவும் அரசியல்வாதியாகவும் புகழ் பெற்ற ஜே.கே.ரித்தீஷ் மறைவு செய்தி திரை உலகினர் மத்தியிலும் அரசியல் கட்சியினர் மத்தியலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின், ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ராமநாதபுரம் முன்னாள் எம்பியும் எனது நண்பருமான ஜே.கே. ரித்தீஷ் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடமும், கலைஞர் கருணாநிதியிடமும் அளப்பரிய அன்பு காட்டியவர். ஜே.கே. ரித்தீஷ் இளம் வயதில் மரணம் அடைந்த துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். என குறிப்பிட்டுள்ளார்.