தம்பிதுரைக்கு மறுபடியும் ஏன் சீட்டு.. கலகலக்கும் கரூர்.. செம உற்சாகத்தில் ஜோதிமணி
கரூர் தொகுதியில் தம்பிதுரையுடன் ஜோதிமணி நேரடியாக மோதவிருப்பதாக சொல்லப்படுகிறது.
Recommended Video
சென்னை: காங்கிரசின் ஜோதிமணியும், அதிமுகவின் தம்பிதுரையும் ஒரே தொகுதியில் திரும்பவும் மல்லுக்கட்ட தயாராகி வருகிறார்களாம்!
இருக்கிற 9 தொகுதியை எந்த கோஷ்டியில் யாருக்கு பிரித்து கொடுப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கரூர் தொகுதியை மட்டும் ஜோதிமணிக்காக தலைமை கேட்டு வாங்கிவிட்டதாம். இதற்கு காரணம் ராகுல் காந்தியிடம் ஜோதிமணிக்கு உள்ள செல்வாக்குதான்!
இன்னும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றாலும், இப்போதே "ஜோதிமணியை ஆதரிப்பீர்" என்று இணையத்தில் தகவல்கள் படுசூடாக ஷேர் ஆகி வருகிறது. இது ஒரு பக்கம் தலைமைக்கு எரிச்சலை தந்ததாகவும் சொல்லப்படுகிறது.
சீட் கிடைக்கலை.. மரியாதை கிடைக்கலை.. அதிருப்தியில் அதிமுக தலைகள்.. பகீர் பரபரப்பில் அதிமுக!
ஒரே சமூகம்
இருந்தாலும் அதிமுக சார்பில் இந்தத் தொகுதியில் பலம் பொருந்திய தம்பிதுரை போட்டியிட உள்ளார். இருவருமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இதற்கு முன்பு 2 முறை போட்டியிட்டு தம்பிதுரையிடம் தோற்றவர் ஜோதிமணி! இப்போது 3-வது முறையாக மோத உள்ளார்.
சுயலாபம்
ஆனால் இந்த முறை தம்பிதுரைக்கு கரூரில் வெற்றி வாய்ப்பு கஷ்டம்தான் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், அதிமுக-பாஜக கூட்டணி. இரண்டாவது காரணம், மத்திய-மாநில அரசு மீதான மக்களின் அதிருப்தி. மூன்றாவது காரணம், தம்பிதுரை மீதான தனிப்பட்ட எதிர்ப்பு. அளவுக்கு அதிகமாக பாஜகவை விமர்சித்துவிட்டு, இன்று சுயலாபத்துக்காக அதே கூட்டணியை ஆதரிக்கும் போக்கு தொகுதி மக்களை வெகுவாக பாதித்துவிட்டது.
தம்பிதுரை கவனிப்பு
இது எல்லாம் சேர்ந்துதான் எதிர்ப்பு வாக்குகளாக மாறி, ஜோதிமணிக்கு ஆதரவாக திரும்பும் சூழல் உள்ளது. மேலும் 2 முறை தோற்றதால், மக்கள் மத்தியில் அனுதாப ஓட்டுக்களையும் சம்பாதித்துள்ளார் ஜோதிமணி. கடந்து முறை தொகுதியில் ஆதரவு பெருமளவு இல்லாவிட்டாலும் "நிறைய" விஷயங்களை செய்ததான் தம்பிதுரை வெற்றி பெற்றார். இந்த முறையும் அப்படி ஒரு "கவனிப்பு" நடந்தால் ஜோதிமணி நிலைமை சிக்கல்தான்!
திமுக கலக்கம்
இது எல்லாம் சேர்ந்துதான் எதிர்ப்பு வாக்குகளாக மாறி, ஜோதிமணிக்கு ஆதரவாக திரும்பும் சூழல் உள்ளது. மேலும் 2 முறை தோற்றதால், மக்கள் மத்தியில் அனுதாப ஓட்டுக்களையும் சம்பாதித்துள்ளார் ஜோதிமணி. கடந்த முறை தொகுதியில் ஆதரவு பெருமளவு இல்லாவிட்டாலும் "நிறைய" விஷயங்களை செய்துதான் தம்பிதுரை வெற்றி பெற்றார். இந்த முறையும் அப்படி ஒரு "கவனிப்பு" நடந்தால் ஜோதிமணி நிலைமை சிக்கல்தான்!