அதான் வரலைல்ல ... பிறகு எதற்கு ப்ரீஅட்வைஸ்.. ரஜினிக்கு ஜோதிமணி பொளேர்
நடிகர் ரஜினிகாந்த் அறிக்கையை விமர்சித்து ஜோதிமணிட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
சென்னை: போர் வருவதற்கு இன்னும் காலம் கனியவில்லையா? ரஜினிக்கு ஜோதிமணி கேள்வி எழுப்பி உள்ளதுடன், மக்களுக்கு எதுக்கு ஃப்ரீ அட்வைஸ் என்றும் கேட்டிருக்கிறார்.
எப்போதுமே ரஜினியிடம் இருந்து ஒரு அறிக்கையோ பேட்டியோ வந்தால், உடனடியாக காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணியிடம் இருந்து ரியாக்ஷன் வந்துவிடும்.
ஸ்டெர்லைட் விவகாரத்திலிருந்து பிரதமர் மோடிக்கு ரஜினி பாராட்டு தெரிவித்தது வரை ஒன்றுவிடாமல் பதிலடி தந்துவிடுவார் ஜோதிமணி.
|
ஜோதிமணி
இந்நிலையில், ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்தார்.
பதிலடி
ரஜினியின் இந்த அறிக்கைக்கு கமல்ஹாசன் உள்பட ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஜோதிமணியும் கருத்து தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இலவச அறிவுரை
"போர் வருவதற்கு காலம் இன்னும் கனியவில்லை போல! பிறகெதற்கு தமிழக மக்களுக்கு இந்த இலவச அறிவுரை? பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் தமிழகத்தில் தொழில்கள் அழிந்து, வேலைவாய்ப்புகள் இல்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்களும், மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதெல்லாம் இவருக்கு ஒரு பிரச்சனையாகவே தெரியாதே!" என்று தெரிவித்துள்ளார்.
கண்டனங்கள்
ஜோதிமணியின் இந்த ட்வீட்டிற்கு ஆதரவும் எதிர்ப்பும் என மாறி மாறி விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன. "இவ்வளவு நாளா நீங்க என்ன பண்ணீங்க? இதுவரை என்ன செஞ்சீங்க? கர்நாடகாவை எதிர்த்து காவேரி பிரச்சினைக்கு குரல் கொடுக்காத நீங்க இப்ப பேசுறீங்களா?" என்றெல்லாம் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.