சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருத்து சொன்னால் கருத்தால் எதிர்கொள்ளுங்க.. கல்லை எடுத்து அடித்தால் எப்படி.. ஜோதிமணி

கமல்ஹாசன் கூட்டத்தில் நடந்த வன்முறை குறித்து ஜோதிமணி ட்வீட் போட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Stalin Supports Kamal: கமலுக்கு ஆதரவு தந்து அரணாக வந்து நிற்கும் திமுக- வீடியோ

    சென்னை: "கல்லை கொண்டு அடிப்பதுதான் ஜனநாயகமா? ஒரு கருத்து சொன்னால், அதுக்கு எதிர்கருத்தை சொல்வது விட்டுவிட்டு, கற்களை எடுத்து அடிக்க வருவது வன்முறை இல்லையா?" என்று ஜோதிமணி கமலுக்காக ட்வீட் போட்டுள்ளார்.

    கமல் பள்ளப்பட்டியில் பேசி 5 நாள் ஆனாலும், காங்கிரசின் ஜோதிமணி இன்னைக்குதான் இது சம்பந்தமாக கருத்து சொல்லி உள்ளார்.

    Jothimani tweet about Stone and Egg range at Kamal hasans campaign

    அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் பிசிஸயாக இருந்து வரும் ஜோதிமணி, நேற்று மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனின் கூட்டத்தில் செருப்பு வீச்சு விவகாரம் நடந்ததற்கு கொதித்தே போய் விட்டார்.

    இது சம்பந்தமாக தனது ட்வீட்டில், "இந்தியாவின் முதல் தீவிரவாதி, தனது வாழ்நாளை இந்த தேசத்திற்காக அர்ப்பணித்து, சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய தேசப்பிதா மகாத்மாவைக் கொன்ற கோட்சேதான். தீவிரவாதிகளோடு மதத்தை இணைக்கத் தேவையில்லை. கமலின் கருத்தை இன்னொரு கருத்தால் மட்டும் எதிர்கொள்வதே ஜனநாயகம். கற்கலால் எதிர்கொள்வது வன்முறை" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த ட்வீட்டுக்கு பலரும் வரவேற்றும், எதிர்ப்பும் கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள். "இந்திராகாந்தி கொலைக்கு பழிக்கு பழியாக உன் கட்சி சீக்கியர்களை கொன்னீங்களே இதுக்கு பேரென்ன?" என்று ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இன்னொருத்தரோ எச்.ராஜாவை இதில கூட விட காணோம். "இதுக்குத்தான் எச். ராஜா அங்கங்க ஆள் செட் பண்ணி வெச்சுருக்காப்ள இது போல் சம்பவம் நடக்குலேனாதான் ஆச்சர்யப்படனும்..." என்று கேஷுவலாக சொல்லி விட்டு போகிறார்.

    English summary
    Congress Jothimani says About Kamalhasans Aravakurichi Compaign violence
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X