வாழ்க ஜனநாயகம்!- ஜோதிமணி கருத்து
Recommended Video
சென்னை: தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை வாழ்க ஜனநாயகம் என்று பாராட்டியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி.
தகுதி நீக்க வழக்கில் 18 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கை செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. மேலும் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவதில் எந்த தடையும் இல்லை எனவும் நீதிபதி கூறினார்.
இந்த தீர்ப்பு குறித்து 18 பேரும் அதிர்ச்சியுடன் குற்றாலத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பணப்பட்டுவாடாவுக்காக இந்திய வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு ,பிறகும் மிகத் தாராளமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டு நடைபெற்ற எங்கள் அரவக்குறிச்சி தொகுதிக்கு இன்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பிற்குப்பிறகு சட்டமன்ற உறுப்பினர் கிடையாது! வாழ்க ஜனநாயகம்!
— Jothimani (@jothims) October 25, 2018
அவர் கூறுகையில் பணப்பட்டுவாடாவுக்காக இந்திய வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, பிறகும் மிகத் தாராளமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டு நடைபெற்ற எங்கள் அரவக்குறிச்சி தொகுதிக்கு இன்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பிற்குப்பிறகு சட்டமன்ற உறுப்பினர் கிடையாது! வாழ்க ஜனநாயகம்! என்றார்.
{document1}