கோட்டை தாண்டி எகிறி அடிக்கணும்.. பிரதமரை யார் இழிவா பேசினாலும் Tit for Tat தான்.. சொல்வது ராஜா
திருமாவளவனை விமர்சித்து எச்.ராஜா ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவது ரசிக்காது... கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம்... அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் டிவிக்களில் யார் பிரதமரை இழிவாக பேசினாலும் அதே பாணியில் Tit for Tat நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும்" என்று பாஜகவினருக்கு, அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அறிவுறுத்தி உள்ளார்.
Recommended Video
நேற்றுமுன்தினம் நியூஸ் 7 டிவி நிகழ்ச்சியில் புலம் பெயர்ந்த தொழிலாளிகள் பிரச்சினை பற்றிய விவாதத்தில், ஜோதிமணி பேசும்போது, பிரதமர் மோடியை தாக்கி பேசியிருந்தார்.
அதேபோல, பாஜகவின் சார்பில் பங்கேற்ற கரு.நாகாஜன் "நீ கேவலமான பெண்'' என்று ஜோதிமணியை விமர்சித்து பேசினார். இது தமிழகம் முழுவதும் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியது. பல தரப்பினரும் இதற்கு கண்டனங்களை பதிவு செய்தனர்.
"ரொம்ப நெருக்கடி".. பிரதமரிடம் வலியுறுத்துவோம்.. பத்திரிகை நிறுவன நிர்வாகிகளுக்கு சிபிஎம் நம்பிக்கை
அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவனும் கண்டித்து கருத்து சொல்லி இருந்தார்.. அதில் "நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை டி.வி. விவாதத்தில் பாஜக பொறுப்பாளர் அவமதித்ததை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. மகளிருக்கு எதிரான பாஜகவின் அடிப்படைவாதமே அவருக்கு இத்தகைய துணிச்சலைத் தருகிறது. இது சனாதனத்தின் விளைச்சல்" என்றார்.
திருமா என்றாலே முதல் ஆளாக வந்து பதில் கருத்து சொல்லும் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா இதற்கும் ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில், என்ன திருமாவளவன் அவர்களே, உங்களைப் போல பா.ஜ.க.காரர்கள் நாகரீகமாக பேசலை என்கிறீர்களா?" என்று கூறி, திருமாவளவன் எப்போதோ காயத்ரி ரகுராமை பற்றி பேசின ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார்.
இன்னொரு ட்வீட்டில் "கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவது ரசிக்காது. கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம். அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் தொலைக்காட்சிகளில் மாண்புமிகு பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும் அதே பாணியில் Tit for Tat நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று தன் கட்சியினருக்கு அறிவுறுத்தியும் உள்ளார். இந்த ட்வீட்டுக்கு வழக்கம்போல் சிறுத்தைகள் திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.