"பிரியங்கா பிரியங்கா பிரியங்கா".. குழந்தைக்கு பெயர் வைத்து இடுப்பில் தூக்கி கொஞ்சிய ஜோதிமணி
கரூர் பிரச்சாரத்தின்போது குழந்தைக்கு ஜோதிமணி பெயர் சூட்டினார்.
சென்னை: "ஜோதிமணி எனும் நான்" என்றுதான் அவரது ட்விட்டர் நம்மை அழைக்கிறது. நாள் தவறாமல் பிரச்சார செயல்பாடுகளை பதிவிட்டு வருகிறார் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி!
"எத்தனையோ பேர் இருக்க.. திரும்ப திரும்ப ஜோதிமணிக்கே எதுக்கு சீட் தரணும்.. 2 முறை சீட் தந்தும் தம்பிதுரையை அவரால ஜெயிக்க முடியல" என்று கட்சிக்குள்ளேயே போர்க்கொடி எழுந்தது. மற்றொரு தரப்பில் ஜோதிமணிக்கு பதிலாக அப்ஸரா ரெட்டியை வேட்பாளராக அறிவிக்கலாமே என்று ஒரு ஐடியாவும் தரப்பட்டது.
ஆனால் ராகுல் காந்தியின் நன்மதிப்பை பெற்ற ஜோதிமணிக்கு திரும்பவும் அடிச்சது அதிர்ஷ்டம்.. கரூத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே சாலைகள், சந்துபொந்து என ஒன்றையும் விடாமல் பிரச்சாரம் செய்கிறார்.
ஒரு பக்கம் ஜோசப் விஜய்.. இன்னொரு பக்கம் ஸ்டாலின்.. அட நம்ம எச்.ராஜா டீ குடிக்க போனது ஒரு தப்பா?
ஜோதிமணி
அதிலும் குழந்தைகள் என்றால் ஜோதிமணிக்கு ரொம்ப பிடிக்கும் போல.. எங்கு சென்று வாக்கு கேட்டாலும் அங்கு கட்டாயம் ஒரு கைக்குழந்தை இருக்கிறது. இது எதார்த்தமாக நடக்கும் விஷயம் என்றாலும், அந்த குழந்தையை தூக்கி கொஞ்சாமல் ஜோதிமணி விடுவதில்லை.
சமத்துவபுரம்
இப்படித்தான், நாகம்பட்டி பஞ்சாயத்தில் உள்ள சமத்துவபுரத்தில் பிரச்சாரம் செய்யும்போது ஒரு குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்து கொண்டு கொஞ்சினார்.
பிரியங்கா
அந்த குழந்தையும் ஜோதிமணியிடம் நன்றாக ஒட்டிக் கொண்டது. பிறகு குழந்தைக்கு பேர் வைக்க வேண்டும் என்று பெற்றோர் ஒரு கோரிக்கையை வைக்க.. உடனே ஜோதிமணி "பிரியங்கா" என்று பெயர் வைத்து தன் விசுவாசத்தை அங்கே காட்டிவிட்டார்.
|
பெயர் சூட்டினேன்
இதுசம்பந்தமான ட்விட்டையும் ஜோதிமணி பதிவிட்டுள்ளார். "நாகம்பட்டி பஞ்சாயத்தில் உள்ள சமத்துவபுரத்தில் ஒரு பெண் குழந்தைக்கு பிரியங்கா என்று பெயர் சூட்டினேன்."
"ஆன் தி வே" பிரச்சாரங்களில் ஜோதிமணி செய்யும் டச்சிங் டச்சிங் மேட்டர்.. கரூர் அதிமுக தரப்பினருக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறதாம்!