அட, மொழிபெயர்ப்பு கிடக்குது.. ராகுலுக்குதான் தங்கபாலு மீது என்ன ஒரு பாசம்!
சென்னை: கேரளாவின் வயநாட்டில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவெடுத்து இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார்.
இந்த தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளராக யார் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிந்தால் உள்ளபடியே நீங்க அசந்து போய்விடுவீர்கள். தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.வி.தங்கபாலுதான் அந்த பொறுப்பாளர்.
தங்கபாலுவா.. என்று நீங்கள் ஆச்சரியத்தில் கேட்பது புரிகிறது. ஆமாம்.. கன்னியாகுமரி தேர்தல் பிரச்சாரத்தின்போது, ராகுல் காந்தி ஒன்று பேச, தான் ஒன்று பேச என மொழி பெயர்ப்புக்கே புது அகராதி எழுதினாரே அதே தங்கபாலுதான்.
ஆயிரம் விமர்சனங்கள் அப்போது எழுந்தாலும், தடைகளை மீறி, இன்று மீண்டும் ராகுல் காந்தியின் நிழலாக வயநாட்டில் கால்பதிக்கிறார் தங்கபாலு. தேர்தல் முடிவடையும்வரை, வயநாட்டிலேயே தங்கியிருந்து இரவு பகலாக தேர்தல் பணியாற்றும் கடினமான டாஸ்க் இவருக்கு.
தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் போட்டியிட தயங்குவது ஏன்?
இம்முறை, தங்கபாலு ராகுல் காந்தியின் வெற்றியை சரியாக, சூப்பராக, அலேக்காக 'பெயர்த்து' கொடுப்பார், மொழி பெயர்ப்பை போல மாற்றிவிட மாட்டார் என அடித்துச் சொல்கிறார்கள் கதர் வேட்டிகள்.