இந்த பக்கம் வந்தீங்க.. அடிச்சு ஓட விட்ருவோம் பார்த்துக்கோங்க.. காளியம்மாள் ஆவேசம்!
திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் காளியம்மாள் சவால் விடுத்து பேசினார்
Recommended Video
சென்னை: இனிமேல், ஒரு தமிழன் மேலயாவது, இன்னொரு படுகொலை நாள் வரும், அதுக்கு நாம இரங்கல் தெரிவிக்கலாம்னு எவனாச்சும் அரசியல் பண்ற எண்ணத்தோடு இந்த பக்கம் வந்தீங்க உள்ளே.. நாங்க வேங்கை மகனெல்லாம் கிடையாது.. அடிச்சு ஓட விட்ருவோம் பார்த்துக்கோங்க என்று நாம் தமிழர் கட்சியின் பிரமுகரும், வட சென்னை தொகுதியில் போட்டியிட்டவருமான காளியம்மாள் ஆவேசமாக பேசியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி எதிர்பாராத அளவில் வாக்குகளை பெற்றிருந்தது. மாநில அளவில் 4-வது கட்சி என்ற பெருமையையும் எட்டி பிடித்தது.
இந்நிலையில், தமிழ் தேசிய பார்வை என்ற பெயரில் நெல்லையில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். மேலும், வடசென்னையில் போட்டியிட்டு தோற்றாலும், மக்களின் மனதில் எளிமையான வேட்பாளர் என்ற பெயரெடுத்த காளியம்மாள் திராவிட கட்சிகளுக்கு சவால் விடுத்து பேசியிருந்தார். அப்போது அவர் சொன்னதாவது:
மக்கள் மொழியில் உதயநிதி பிரசாரமாம்.. மிகப் பெரிய ஆதரவாம்... சொல்வது ஐ.பி செந்தில்குமார்
நான் ஒரு அனாதை
31 வருஷ காலம், எனக்கு அம்மா, அப்பா யாரும் இல்லை. என் சொந்தத்தை எல்லாம் தொலைச்சிட்டேன். நான் ஒரு அனாதை புள்ளை. எனக்கு குடும்பமும் இல்லை. ஆனா இன்னைக்குதான் தெரியுது. இத்தனை கோடி பேருடன் பிறந்த சகோதரி என்று!
ஒத்த பைசா
என் முன்னாடியே அந்த வேட்பாளர் சொல்றாரு, நான் வெற்றி பெற்றுட்டேன்னு! யாருடா சொன்னது நீ வெற்றி பெற்றுட்டேன்னு. தேர்தல் ஆணையம் வேணும்னா நீ வெற்றி பெற்றுட்டேன்னு சொல்லி இருக்கும், 61ஆயிரத்து 515 வாக்கு வாங்கினாலும், இவங்க அத்தனை பேரும் மனசிலும் நாங்க இருக்கிறோம். அதனால நாங்கதான் வெற்றியே தவிர, நீ தந்த 1000 ரூபாய்க்கு வெற்றி இல்லை. இன்னொருத்தர் சொல்றாரு, "90 கோடி ரூபாய் செலவு பண்ணிட்டு, நான் 30 ஆயிரம் வாக்குகள் வாங்கி இருக்கேன். ஆனா நீங்க ஒத்த பைசா கொடுக்காம, 60 ஆயிரம் வாக்கு வாங்கிட்டியா?"ன்னு.
பஸ் சார்ஜ் நான் தர்ரேன்
யாரெல்லாம் தமிழ் மக்களை அடிக்கணும், தமிழ் மக்களை உதைத்தால் கேள்வி கேட்க யாருமில்லைன்னு யாரெல்லாம் நினைச்சீங்களோ.. அவங்க எல்லாரும் இங்க ஒரு நிமிஷம் வந்துட்டு போங்க.. பஸ் ஃபேர் நான் தர்ரேன். வந்துட்டு போ! வந்து..ட்..டு.. போ.. பாக்கலாம். ஏண்டா, அடிச்சா கேள்வி கேட்க யாருமில்லைன்னு பார்த்தீங்களா? எங்க இருந்து ஒரு காட்டு மிருகம் எங்களை நோக்கி வந்தாலும், அடிச்சி விரட்டுற பெண் புலிகள் இருக்கிற எங்க மத்தியில.. உன்னை விட்டுருவோமா?
5 கோடி மக்கள்
ஒருநாள் வரும்.. 2021.. உன் அதிகாரம், ஆணவம், அகம்பாவம், எங்களை அழிச்ச அந்த இன வெறி அனைத்தையும் ஓரங்கட்டி உன்னை தெருவுல நிப்பாட்டி உன்னை தரைமட்டத்துக்கு இறக்கி.. மேலே ஏறி எங்க அண்ணனை நிக்க வெக்கலை? வக்கிறேன்டா.. வக்கிறோம்.. ஒரு சத்தம், ரெண்டு சத்தம் இல்லை.. இப்பவே 17 லட்சம் சத்தம்! இனி வரும் பாருங்க.. 5 கோடி மக்கள் சத்தமும்!
அது அவரது தாய்மொழி
என்னை ஒருத்தர் கேள்வி கேட்குறாரு, "எப்படிங்க நாம் தமிழர் கட்சியில எல்லாருமே இப்படி பேசறீங்கன்னு?" இதுல என்ன ஆச்சரியம் இருக்கு.. சீமானுடைய தம்பி, தங்கச்சிங்க சீமான் மாதிரி பேசாம, "ஆக.. ஆக.." ன்னு பேச சொல்றீங்களா? மானத்தமிழன், மறத்தமிழன், பச்சை தமிழன், வளங்களை நேசிப்பன், மக்களின் மனங்களை உணர்ந்தவர், அதனால எங்க அண்ணன் எழுதி வெக்காம பேசுவாரு. நம்ம ஆளும் எழுதி வெக்காம போய் தெலுங்கு தேசத்துல போய் பேசனாரு.. சரியா, தெளிவா பேசினாரு.. ஏன்னா அது அவருடைய தாய்மொழி!
அடிச்சு ஓட விட்ருவோம்
இனிமேல், ஒரு தமிழன் மேலயாவது, இன்னொரு படுகொலை நாள் வரும், அதுக்கு நாம இரங்கல் தெரிவிக்கலாம்னு எவனாச்சும் அரசியல் பண்ற எண்ணத்தோடு இந்த பக்கம் வந்தீங்க உள்ளே.. நாங்க வேங்கை மகனெல்லாம் கிடையாது.. அடிச்சு ஓட விட்ருவோம் பார்த்துக்கோங்க.
6 அடி பள்ளம்
இப்போ திராவிட கட்சிகளை ஜெயிக்க வெச்ச அத்தனை பேருக்கு கிட்ட போய் சொல்லுங்க, நாமளே 6 அடிக்கு பள்ளம் தோண்டி, நம்ம மேலே நாமளே மண்ணை அள்ளி போட்டுக்கிட்டோம்னு அர்த்தம்" என்றார் ஆவேசமாக.