ராமதாஸ் வீட்டில் குருவுக்கு தனி சாப்பாடு போட்டாங்க.. அதுக்குப் பிறகுதான்.. தங்கை கதறல்!
Recommended Video
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் குருவுக்கு தனி வகையான உணவு பரிமாறப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வன்னியர் சங்கத் தலைவராக இருந்தவர் காடுவெட்டி குரு. இவர் கடந்த ஆண்டு மே 25-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவில் பாமகவின் பங்கு இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் கூறி வந்தனர்.
இந்த நிலையில் இவரது குடும்பத்தினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், குருவின் மரணம் இயற்கையானதல்ல. 2011- ஆம் ஆண்டு மருத்துவர் ராமதாஸ் வீட்டில் விருந்தில் குரு பங்கேற்றார்.
காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல.. ராமதாஸ், அன்புமணி மீது குடும்பத்தினர் சரமாரி புகார்
விருந்தில் தனக்கு மட்டும் தனி உணவு பரிமாறப்பட்டதாக குரு எங்களிடம் தெரிவித்திருந்தார். அந்த விருந்தில் உணவு உண்டதிலிருந்து தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் குரு தெரிவித்திருந்தார்
குருவுக்கு சிகிச்சை அளித்திருந்தால் நிச்சயம் பிழைத்திருப்பார்.ஆனால் படிப்படியாக அழித்துவிட்டார்கள். பாமக போட்டியிடும் 7 லோக்சபா தொகுதிகளிலும் நிச்சயம் தோற்கடிப்போம் என குரு குடும்பத்தினர் சபதம் ஏற்றனர்.