சவுந்தர்யாவும் நானும்...திருமணம் குறித்து...கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு வீடியோ வெளியீடு!!
சென்னை: ''நானும் சவுந்தர்யாவும் கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்தோம். அவர்களது வீட்டில் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆதலால், என்னுடைய பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம்'' என்று பிரபு எம்எல்ஏ ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கலப்பு திருமணம் செய்து கொண்டு இருக்கும் எம்எல்ஏ பிரபு மேலும் அந்த வீடியோவில், '' எங்களது திருமணம் குறித்து வதந்திகள் வருகின்றன. நான் சவுந்தர்யாவை கடத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வதந்திகள் பரவுகின்றன. நாங்கள் 4 மாதங்களாக காதலித்து வந்தோம். முறைப்படி பெண் கேட்டு சவுந்தர்யாவின் வீட்டுக்கு சென்றோம். அவர்கள் பெண் தர மறுத்ததால், என்னுடைய பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம்'' என்று தெரிவித்துள்ளார்.
எம்எல்ஏவுக்கு 39 வயசு.. என் மகளுக்கு 19 தான் ஆகுது.. எப்படிங்க?.. கதறி அழும் கோவில் குருக்கள்!
தியாகதுருகம் பகுதியை சேர்ந்த தனது காதலி சௌந்தர்யாவை, தனது குடும்பத்தினர் முன்னிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு நேற்று திருமணம் செய்து கொண்டார். ஆனால், எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்ததாக சௌந்தர்யாவின் தந்தையான கோவில் அர்ச்சகர் சாமிநாதன் தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அர்ச்சகர் சாமிநாதன் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ இரண்டாமாண்டு படித்து வருவதாகவும், தன்னுடைய மகளை கள்ளக்குறிச்சி சட்டசபை உறுப்பினர் பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தான் மிரட்டப்படுவதாகவும், எனவே தனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.