நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.. மோடி மீது கமல் விமர்சனம்
சென்னை: பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன், ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே, அவர் இன்றுதான் வருகிறார் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு, எல்லோரும் வீட்டில் மின் விளக்குகளை ஆப் செய்துவிட்டு, டார்ச் உள்ளிட்ட விளக்குகளை ஏந்தி, கொரோனாவுக்கு எதிரான ஒற்றுமையை காட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு ட்வீட் வெளியிட்டார்.
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் அதிருப்தி வெளிப்படுத்தி வருகிறார்கள். ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், எங்கள் மாநில வலியை மோடி இன்னும் புரிந்து கொள்ளவில்லை, உணவு சப்ளை இல்லை என கவலை தெரிவித்தார்.
பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 3, 2020
இந்த நிலையில், கமல்ஹாசன் இன்று இரவு வெளியிட்ட ட்வீட்டில், பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார். இவ்வாறு கூறியுள்ளார்.
கொரோனாவுக்கு 5 பேர் பலி- சிங்கப்பூரில் ஏப்.7 முதல் 1 மாதம் லாக்டவுன்-பிரதமர் லீ சியென் லூங்