புரட்சியின் வித்தாய் விளைந்து சமூகத்தின் மாற்றத்திற்கு காரணியாய் கனிந்த பெரியார்- கமல்ஹாசன் புகழாரம்
சென்னை: பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது பெருமைகளை தனது ட்விட்டர் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
பெரியாரின் 142 ஆவது பிறந்த நாள் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
அது போல் பெரியாரின் புகழையும், அவரது பகுத்தறிவு குறித்தும் அரசியல் தலைவர்கள் நினைவுக்கூர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர்!
புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர்! "பெரியாருக்கு முன்" "பெரியாருக்குப் பின்" என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பெரியாரின் தாடி ரகசியம்... குழம்பிய நண்பர்கள்... சுவையான... சுவாரஸ்யமான பின்னணி..!