கூத்துப்பட்டறை ந. முத்துசாமி ஈடு இணையற்ற சாதனையாளர்- கமல் இரங்கல்
Recommended Video
சென்னை: கூத்துப்பட்டறை ந. முத்துசாமியின் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கூத்துப்பட்டறை நிறுவனர் ந. முத்துசாமி இன்று உடல்நலக் குறைவால் காலமானார். இவர் பல்வேறு கலைஞர்களின் பிதாமகனாக இருந்துள்ளார். நாசர், தலைவாசல் விஜய், சண்முகசுந்தரம், விஜய் சேதுபதி, விமல் உள்ளிட்ட நட்சத்திரங்களை உருவாக்கியவர்.
இவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் செய்தியை வீடியோ மூலமாக பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில் சில தனிமனிதர்களின் இழப்பை ஒரு தலைமுறையுடன்தான் ஈடு செய்ய வேண்டும்,.
அப்படிப்பட்ட முக்கியமான ஈடு இணையற்ற சாதனையாளர். கூத்து உலகிற்கும் நாடக உலகிற்கும் தூரத்து உறவாக சினிமாவுக்கும் அவர் பயன்பட்டுள்ளார். அந்தளவுக்கு பல்துறை வித்தகராக தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். ந. முத்துசாமி. அவர் ஒருவராய் இருந்து செய்த வேலையை ஒரு தலைமுறை செய்ய கடமைப்பட்டிருக்கிறது என்றார்.
இருந்த போது செய்த சேவைக்கு கலைஞராக நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார் கமல்.