நண்பர் விவேக் குணமடைய விரும்புகிறேன்.. தடுப்பூசி குறித்த வதந்தி பரப்பாதீர்கள்.. கமல்ஹாசன் ட்வீட்!
சென்னை: நண்பர் விவேக் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
'சின்னக் கலைவாணர்' என அன்புடன் அழைக்கப்படும் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவர் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 'எக்மோ; உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒரே நாளில் மாரடைப்பு ஏற்படாது.. விவேக்கிற்கு போடப்பட்டது கோவாக்சின்.. ராதாகிருஷ்ணன்
விவேக்கின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், 24 மணி நேரம் அவரது உடல்நிலையை கண்காணிக்க வேண்டியதுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். நடிகர் விவேக் குணமடைய வேண்டிய பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வேண்டி வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன். கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.