அப்பா நலமுடன் இருக்கிறார்.. நான்கைந்து நாட்களில் வீடு திரும்புவார்- கமல் மகள்கள் அறிக்கை
சென்னை: தந்தை நலமுடன் இருக்கிறார் என்றும் நான்கைந்து நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் கமலின் மகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
Recommended Video
பிக்பாஸ் போட்டியின் வெற்றியாளரை அறிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள போரூர் ஸ்ரீராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நலம் குறித்து மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் அறிக்கை மூலம் தகவலை தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து அவர்கள் தங்களது அறிக்கையில் கூறுகையில் இன்று காலையில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் ஜே எஸ் என் மூர்த்தி ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகனகுமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
அப்பா நலமாக இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார்.
நேர்மையானவர்களுக்கு ஓட்டு.. எல்லா வோட்டிங்கிலும் இதை ஃபாலோ செய்யணும்.. பொடி வைத்து பேசிய கமல்ஹாசன்
சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களைச் சந்திப்பார் மகிழ்விப்பார். அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.