கமல் கையில் டார்ச் லைட்.. மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்தது புதிய சின்னம்!
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது . இன்னும் ஒரு மாதத்தில் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வருகிறது.
இந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடும் என்று உறுதியாகி உள்ளது. இதுவரை மக்கள் நீதி மய்யம் கட்சி யாருடனும் கூட்டணி வைக்கவில்லை.
வாரணாசியிலேயே மீண்டும் களம் இறங்குகிறார் பிரதமர் மோடி?
தனித்து போட்டி
மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் தனியாக போட்டியிடும் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார். இதற்காக அவர் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார். வேட்பாளர் நேர்காணல் தற்போது மக்கள் நீதி மையம் சார்பாக நடந்து வருகிறது.
டார்ச் லைட்
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. கருப்பு வெள்ளையில் இருக்கும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
என்ன காரணம்
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையம் மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தற்போது அங்கீகாரம் பெறாத கட்சியாகும். அதனால் லோக்சபா தேர்தலில் அவர்கள் விரும்பிய சின்னத்தில் போட்டியிட முடியாது. ஆனால் விரும்பிய சின்னம் குறித்து கோரிக்கை வைத்து அது இருக்கும் பட்சத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
இதில்தான் போட்டி
பொது சின்னத்தில் இருந்து தேர்தல் ஆணையம் அளிக்க கூடிய சின்னத்தல் இருந்து இந்த கட்சிகள் போட்டியிட முடியும். இதையடுத்து தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பொதுச் சின்னத்தில் உள்ள டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி இருக்கிறது. இந்த தேர்தலில் இந்த சின்னத்தில் கீழ்தான் மநீம போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.