திமுகவின் போராட்டத்தில் முதல் முறையாக கை கோர்க்கும் கமல்ஹாசனின் மநீம!
Recommended Video
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் டிசம்பர் 23-ல் நடைபெறும் திமுக தலைமையிலான பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்க உள்ளது. திமுக தலைமையிலான போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் முதல் முறையாக பங்கேற்கிறது.
சென்னையில் திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் டிசம்பர் 23-ல் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதில் அனைத்து அரசியல் கட்சிகள், மாணவர்கள் அமைப்புகள், பொதுமக்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னையில் நேற்று செய்தியாளர்ர்களிடம் பேசிய கமல்ஹாசன், திமுகவின் சென்னை பேரணியில் பங்கேற்போம் என்றார்.
தயார் ஆகி வரும் பிரச்சார வேன்.. தமிழகத்தை சுற்றிவர கமல் திட்டம்
கமலுக்கு அழைப்பு
இந்நிலையில் திமுகவின் அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி தலைமையிலான குழுவினர் கமல்ஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது திமுக தலைமையில் சென்னையில் நடைபெறும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
திமுக போராட்டத்தில் கமல்
இதனை கமல்ஹாசன் உள்ளிட்ட மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து டிசம்பர் 23 பேரணியில் மக்கள் நீதி மய்யமும் பங்கேற்கிறது.
உச்சநீதிமன்றத்தில் மநீம
திமுகவின் பேரணியில் மநீம முதல் முறையாக பங்கேற்கிறது. அண்மையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மநீம உச்சநீதிமன்றத்துக்கு முதலில் சென்றது. இதனைத் தொடர்ந்து திமுகவின் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
அரசியலில் திருப்புமுனை?
தற்போது மநீமவும் திமுகவும் கை கோர்த்து பேரணியில் பங்கேற்க இருக்கின்றன. ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் கை கோர்க்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட அரசியல் சூழ்நிலையில் திமுகவுடன் கமல்ஹாசன் இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த திருப்பமாக பார்க்கப்படுகிறது.