ஒரு மணி நேர மழை.. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை.. சென்னை மழை குறித்து கமல்
சென்னை: ஒரு மணி நேர மழை, தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை.
வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை.
கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை.
வடிகால்கள் வாரப்படவில்லை. குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது ஏன்?.. வானிலை மையம் விளக்கம்
சென்னையில் இன்று ஒரு மணி நேரத்திற்கு மேல் அதிகபட்சமாக மழை பெய்தது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ மழை பதிவானது. புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது.