நயன்தாராவை ராதாரவி விமர்சித்தது வருத்தம் அளிக்கிறது- கமல் வேதனை
Recommended Video
சென்னை: ஒரு கலைஞனாக இருந்து கொண்டு ராதாரவி நடிகை நயன்தாராவை விமர்சனம் செய்தது வருத்தம் அளிக்கிறது என கமல்ஹாசன் தெரிவித்தார்.
நயன்தாரா நடிப்பில் வெளியாகும், 'கொலையுதிர்' காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ராதாரவி, நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார்.
அதிமுக கண்டுக்கலை.. செலவழிக்க பத்து காசு இல்லை.. கடனாளியாக மாறி வரும் தேமுதிக வேட்பாளர்கள்
முன்பெல்லாம் கே.ஆர்.விஜயாவை மட்டும் அம்மன் வேடங்களுக்கு நடிக்க வைப்பார்கள். தற்போது எல்லாம் யார் வேண்டுமானாலும் சாமி வேஷம் போடலாம். ஏன் என்றால் பார்த்த உடனேயே கும்பிடறவரையும் போடலாம். பார்த்த உடனேயே கூப்பிடவரையும் போடலாம்.
மீடு' விவகாரம் குறித்தும் பேசிய அவர், நடிகைகள், நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டு கொள்ளலாம் என முன்னரே ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் பிறகு பிரச்னைகள் வராது என்றார்.
இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்துள்ளன. இதனிடையே ராதாரவி திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் ராதாரவி கருத்து குறித்து கமல்ஹாசன் கூறுகையில் நயன்தாராவை மரியாதையாக நடத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது, ராதாரவி ஒரு கலைஞராக இருந்து கொண்டு இப்படி பேசியது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு திமுகவுக்கு பாராட்டுகள் என்றார்.