ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்க கற்று கொடுத்தாலே சமூக நீதி சாத்தியம்.. கமல்ஹாசன்
சென்னை: ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்க கற்றுக் கொடுத்தாலே சமூக நீதி சாத்தியப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் பெண்கள் தினம் மார்ச் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி ஜனாதிபதி, பிரதமர், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளை கூறினர். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புக்களும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும்.
பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புக்களும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும்.தினசரி இந்த சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 8, 2020
தினசரி இந்த சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள். ட்விட்டரில் #HappuWomensDay2020, #HappyWomensDay ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரென்டாகி வருகிறது.
சமூகத்தில் குடும்பத்தின் சரிபாதி பெண்கள்.. முக ஸ்டாலினின் பெண்கள் தின வாழ்த்துச் செய்தி