ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு.. திரும்பி பார்த்தால்.. கட்சியினரோடு கமல் ஹாசன்!
சென்னை: சென்னையில் மக்களோடு மக்களாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அசத்தியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன்.
Recommended Video
தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒவ்வொரு வகையான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
டீ கடைக்குச் சென்று மக்களோடு கலந்து பேசிய படி டீ சாப்பிடுவது, பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடுவது ஒரு வகையாகும்.
வெல்லப்போறான் விவசாயி.. சீமான் சொன்ன அந்த வார்த்தை.. சோஷியல் மீடியாவை ஆளும் நாம் தமிழர்.. செம பிளான்
மெட்ரோ ரயில்
கிராமசபை கூட்டங்கள் நடத்தி மக்களிடம் குறைகளை கேட்பது என்று எந்த ஒரு வகையிலாவது மக்களோடு தொடர்பில் இருக்க முயற்சி செய்கிறார்கள் அரசியல்வாதிகள். இதில் கமல்ஹாசன் வித்தியாசமானவர். அவர் தேர்ந்தெடுத்த இடம் மெட்ரோ ரயில்.
ஆலந்தூர் ரயில் நிலையம்
சென்னை ஆலந்தூரில் உள்ள மெட்ரோ ரயில் ஸ்டேஷன் இன்று மாலை திடீரென பரபரப்பானது. இதற்கு காரணம் தனது கட்சி பிரமுகர்களுடன் கமல்ஹாசன் அங்கு வருகை தந்தார்.
மக்களிடம் பேசியபடி
ஒரு ரயிலில் ஏறி மக்களோடு பயணம் செய்தார். அப்போது அவர்களிடம் பேசிக் கொண்டே பயணித்தார். தூரமாக அமர்ந்து இருந்த ஒரு நடுத்தர வயது ஆண் எழுந்துவந்து கமல்ஹாசனிடம், தமிழகத்திலுள்ள சில பிரச்சனைகளை குறிப்பிட்டு பேசிக் கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது.
மக்கள் நீதி மய்யம் உறுதி
மக்களின் பிரச்சனைகளை அகற்றுவதற்குத் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கியுள்ளேன். எனவே, உங்களுக்கு தீர்வு வரும் என்று உறுதியாக தெரிவித்தார் கமல்ஹாசன். இவ்வாறாக இன்றைய தேர்தல் பிரசாரம் கமலுக்கு சிறப்பாக அமைந்தது என்று சொல்லலாம்.