சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனியும் காத்திருப்பதில் பொருளில்லை.. பேரறிவாளனுக்காக கமல் கோபக் குரல்!

Google Oneindia Tamil News

சென்னை : பேரறிவாளனை விடுதலை செய்ய இனியும் வேறு அனுகூலங்களுக்காக காத்திருப்பதில் பொருள் இல்லை என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் காரணமாக ஓய்வில் இருக்கும் கமல், 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையினரை கண்டித்தும், பேரறிவாளரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கருத்து தெரிவித்துள்ளார்.

kamala tweets for perarivalan release

கமல் தனது டுவீட்டில், எமது மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான இலங்கைக் கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலைக் கண்டிக்கிறேன். பாரம்பரிய கடல் பகுதியில் எமது மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடித் தொழில் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

kamala tweets for perarivalan release

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவீட்டில், பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று. இனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை. உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

English summary
kamala tweets for perarivalan release and raise voice against srilankan navy who killed tamilnadu fishermen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X