சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யோவ்.. என்னய்யா பண்ணுவ, போய்யா.. கழட்டிருவியா நீ.. போலீஸ் அதிகாரியிடம் எகிறிய திமுக எம்எல்ஏ

போலீஸ் அதிகாரியை காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    போலீஸ் அதிகாரியிடம் எகிறிய திமுக எம்எல்ஏ-வீடியோ

    சென்னை: "யோவ் என்னய்யா பண்ணுவே நீ.. மரியாதை கெட்டுடும் ஜாக்கிரதை.. அப்படித்தான் பேசுவேன் நான்.. என்னய்யா கழட்டுவே நீ?" என்று போலீஸ் அதிகாரியிடம் எகிறிய திமுக எம்எல்ஏ எழிலரசனின் வீடியோதான் இப்போது சுட சுட வைரலாகி வருகிறது.

    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பிரசாரம் செய்ய வந்தபோது, அங்கு ஏராளமான அதிமுகவினர் திரண்டனர். அதே நேரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள வருவதாக இருந்தது.

    இதன்காரணமாக தேரடி பகுதியில் திமுகவினரும் திரண்டு விட்டனர். ஒரு பக்கம் திமுக, மறுபக்கம் அதிமுக என தொண்டர்கள் திரண்டுவிட்டதால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

    வாங்க வாங்க.. ஏம்ப்பா ஸ்டூலை எடுத்து இப்படி போடுப்பா.. அசத்திய திருமா.. வியந்த நாம் தமிழர் வேட்பாளர்வாங்க வாங்க.. ஏம்ப்பா ஸ்டூலை எடுத்து இப்படி போடுப்பா.. அசத்திய திருமா.. வியந்த நாம் தமிழர் வேட்பாளர்

    எம்எல்ஏ எழிலரசன்

    எம்எல்ஏ எழிலரசன்

    அது மட்டுமல்லாமல், திமுகவினருக்கு தேர்தல் பிரசாரம் நடத்த அனுமதி வழங்கிய இடத்திலும் அதிமுகவினர் குவிந்து விட்டனர். இதனால் அந்த இடமே பதட்டமாகிவிட்டது. அப்போதுதான் அங்கு காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன் வந்தார்.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதில் ஒருவர் போலீஸ் அதிகாரி போல தெரிகிறது. அவரிடம் ஒருமையில் பேசி சண்டைக்கு போய்விட்டார் எழிலரசன்.

    திமுக ஆதரவாளர்கள்

    திமுக ஆதரவாளர்கள்

    "யோவ் என்னய்யா பண்ணுவே நீ.. மரியாதை கெட்டுடும் ஜாக்கிரதை.. அப்படித்தான் பேசுவேன் நான்.. என்னய்யா கழட்டுவே நீ?" என்று ஆவேசமாக பேசினார். ஆனால் அந்த அதிகாரி நிலைமையை கட்டுப்படுத்தவே முயற்சி செய்தார். பதிலுக்கு எம்எல்ஏவிடம் ஆவேசமாக நடந்து கொள்ளவில்லை. மாறாக எழிலரசனுடன் வந்த திமுக ஆதரவாளர்கள் கொதித்து போய் பேசினர்.

    சாலை மறியல்

    சாலை மறியல்

    பிறகு நிர்வாகிகளுடன் சேர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டார். இதனால், விஷ்ணுகாஞ்சிபுரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் திமுக எம்எல்ஏ எழிலரசன் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே திமுக என்றாலே ரவுடி கட்சி என்று பெயர் கிடைத்துள்ளது.

    ஆவேச கத்தல்

    ஆவேச கத்தல்

    இது போதாதென்று, பியூட்டி பார்லர், பிரியாணி கடை விவகாரம் என்று அதிமுக தரப்பில் கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில், அதுவும் தேர்தல் நடக்கிற சமயத்தில் எழிலரசின் ஆவேச கத்தல் வீடியோ மேலும் பரபரப்பை கூட்டி உள்ளது!

    English summary
    Kancheepuram DMK MLA Ezhilarasan argues with Police Officer during the campaign and case filed against him
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X