ஆண் குழந்தைக்கு தரும் உரிமைகளை... பெண் குழந்தைக்கும் தர வேண்டும் -கனிமொழி
சென்னை: ஆண் குழந்தைக்கு தரும் உரிமைகளை பெண் குழந்தைக்கும் பெற்றோர் தர வேண்டும் என திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
பாலின சமத்துவம் என்ற தலைப்பில் பெண்களுக்கான சவால்கள் குறித்து சென்னை சமூகப்பணிகள் கல்லூரி நடத்திய கருத்தரங்கத்தில் காணொலி மூலம் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், வீட்டு வேலைகளை பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து ஆண்களும் அந்த பணிகளை செய்ய முன்வர வேண்டும் எனக் கூறியுள்ளார். பெண்கள் தங்களுக்கு எதிரான அநீதிகளை இனி வரும் நாட்களில் துணிச்சலுடன் வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
பெண்கள் தங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்தினால் மட்டுமே இலக்கை அடைய முடியும் என்றும், நம்மால் முடியாதது எதுவுமில்லை என்ற வைராக்கியத்துடன் செயல்பட்டால் மட்டுமே பெண்கள் சாதனைகள் புரியமுடியும் எனவும் கனிமொழி தெரிவித்தார். இந்த கருத்தரங்கத்தில் சென்னை சமூகபணிகள் கல்லூரியை சேர்ந்த முதுகலை சமூக பணித்துறை மாணவர்கள் பங்கேற்றனர்.
"ஹு" நிர்வாக குழு தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதவி ஏற்பு.. அதிரடி.. சீனாவிற்கு சிக்கல்!
மேலும், குடும்ப வன்முறை நாட்டில் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த கனிமொழி எம்.பி., பெண்களின் வளர்சிக்கு தடையாக இருப்பதில் குடும்ப வன்முறை பிரதான இடத்தில் இருப்பதால் குறிப்பிட்டார். பெண் என்பதற்காக அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வக்கிர எண்ணத்துடன் செயல்படுபவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என கனிமொழி எம்.பி. கேட்டுக்கொண்டார்.