கலைய போகிறது தேமுதிக... குமரியில் விழுந்த முதல் விக்கெட்.. திமுகவுக்கு பாய்ந்த மா.செ.!
குமரி மாவட்ட தேமுதிக நிர்வாகி திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்
Recommended Video
சென்னை: ஏற்கனவே எதிர்பார்த்தபடியே, கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கும் தேமுதிகவும் கரைய ஆரம்பித்துள்ளது. குமரியில் முதல் விக்கெட் விழுந்துவிட்டது!
விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லாமல் போனது தெரிந்த விஷயமே. இருந்தாலும் குணமாகி வந்து மக்களிடம் பேசமாட்டாரா என்று காத்து கிடந்த லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். இப்படித்தான் அக்கட்சியின் நிர்வாகிகளும் காத்து கிடந்தனர்.
கடந்த மாதம் நடைபெற்ற அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு கேப்டன் வரவில்லை. இதைபற்றி நிர்வாகிகள் சொல்லும்போது, "அவருக்கு உடம்பு சரியில்லை என்றாலும், எங்களையாவது அவருகிட்ட கூட்டிட்டு போக சொன்னோம். ஆனால் ஏற்பாடு செய்யவில்லை.
குரு பெயர்ச்சி பலன்கள் 2019: நான்காமிட சுக குருவால் கன்னிக்கு கவலைகள் தீரும்
பின்னடைவு
ஒவ்வொரு தேர்தல் பின்னடைவிலும், தலைவரிடம் எங்களை பேச வையுங்கள், தலைவரை கண்ணுலயே காட்டுங்க என்றோம். பதில் இல்லை. இந்த கட்சியில் இன்னமும் நாங்கள் இருப்பதா வேண்டாமா என்று எங்களுக்கே தெரியவில்லை" என்று புலம்பி தள்ளினார்கள்.
பிரேமலதா
ஆனால் தேமுதிக முழுமையாக பிரேமலதா கட்டுக்குள் போய்விட்டதால், தேமுதிக 10 ஆண்டுகளில் 2.39 சதவிகித வாக்குகளை பெற்று சுருங்கிவிட்டது. நிர்வாகிகளின் இந்த புலம்பல், வேதனை, கோரிக்கை எதுவுமே எடுபடவில்லை. மாறாக, தனது தம்பியை கொல்லைப்புறம் வழியாகவும் டெல்லிக்கு அனுப்ப முடியவில்லையே. எடப்பாடி அதற்கும் வழிவிடாமல் செய்து விட்டாரே என்பதுதான் பிரேமலதாவின் தற்போதைய வேதனையாக உள்ளதாக கட்சி நிர்வாகிகளே வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்தனர்.
மா.செயலாளர்கள்
அதிமுகவோடு கூட்டணி வைத்தது சிலருக்கு பிடிக்கவில்லை, பாஜகவோடு கூட்டணி வைத்தது பலருக்கு பிடிக்கவே இல்லை. இதனால் சில மாவட்ட நிர்வாகிகள் அந்தக் கட்சியில் இருந்து விலகி அமமுகவில் ஏற்கனவே இணைந்துவிட்டனர். இப்போது இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளவர் கன்னியாகுமரி தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன்தான்.
செல்வாக்கு
இவர் குமரியில் நல்ல செல்வாக்கு பெற்றவர். வழக்கறிஞரும்கூட.. 2016 சட்டமன்ற தோ்தலில் பத்மனாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். எனினும் தேமுதிகவை குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு அந்த மாவட்டத்தில் உயர்த்தி கொண்டு வந்தார். கடைசி முயற்சியாக, கடந்த 6-ம் தேதி உள்ளாட்சி தோ்தலில் வேட்பாளர் தேர்வு செய்து சம்மந்தமான ஆலோசனை கூட்டம் நடத்தினார் ஜெகநாதன். இதில் தலைமையை பகிரங்கமாக விமர்சித்துள்ளார் ஜெகநாதன்.
டிஸ்மிஸ்
மேலும் கலந்துகொண்ட ஒன்றிய நகர மாவட்டத்தை சோ்ந்த 53 நிா்வாகிகளில் 48 போ் அதிமுகவுடன் கூட்டணியே கூடாது என்று கறாராக சொல்லி விட்டனர். இதை தீர்மானமாக போட்டு கட்சி தலைமைக்கும் மாவட்ட செயலாளராக இருந்த ஜெகநாதன் அனுப்பி வைத்தார். இதற்கு எந்த பதிலும் தலைமையிடம் இருந்து வரவில்லை என கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் ஜெகநாதன் கட்சி மாற போவதாக தகவலும் கசிந்தது. ஆனால் அவர் மாறுவதற்குள் கட்சி தலைமையே இவரை டிஸ்மிஸ் செய்துவிட்டது.
இணைந்தனர்
இதையடுத்து, ஜெகநாதன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை முன்னிலையில் அவர்கள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.
காரணிகள்
ஒருக்காலத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக, இப்போது தனது அரசியல் வாழ்வின் மோசமான காலகட்டத்தின் உச்சியில் உள்ளது. இதற்கு காரணிகள், விஜயகாந்தின் வீட்டிற்கு வெளியே இல்லை.. விஜயகாந்த்தின் வீட்டிற்கு உள்ளேயேதான்!