வசந்தகுமார் எம்பி, மனைவிக்கு கொரோனா.. சென்னை மருத்துவமனையில் அட்மிட்
சென்னை: கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்பி வசந்த குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனா பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டு வருவதை பார்க்கிறோம்.
சென்னை, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பழகன் கொரோனா பாதித்து உயிரிழந்தார். அவரை தவிர்த்து பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில்தான் வசந்தகுமார் எம்பிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இருவரும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொரோனா: தமிழகத்தில் ஒரேநாளில் 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்
நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை எம்பிக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது இந்த பட்டியலில் வசந்தகுமார் எம்பியும் சேர்ந்துள்ளார்.