தேர்தலில் யாருக்கு ஆதரவு? விஜய் மக்கள் இயக்கத்தில் ஒரே குளறுபடி
சென்னை: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் யாருக்கும் ஆதரவு இல்லை. தனிப்பட்ட நிலையில் நேட்டாவிற்கு வாக்களிப்போம் என்று, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் ஜோஸ் பிரபு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க செயலாளர் சபின் தலைமையில் விஜய் ரசிகர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் வேட் பாளர் வசந்தகுமாருக்கு, ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று மேற்க்கு மாவட்ட தலைவர் ஜோஸ் பிரபு களியக்காவிளையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
ரசிகர்கள் முடிவெடுத்தாச்சு.. விஜய் வாய்ஸ் தர வேண்டியது மட்டும்தான் பாக்கி!
அப்போது அவர் கூறியதாவது:
கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு இல்லை. பணம் பெற்று கொண்டு தான் காங்கிரஸ் வேட்ப்பாளர் வசந்தகுமாருக்கு ஆதரவு தெரிவித்த ஒரு சில இயக்க நிர்வாகிகள் மீது தலைமை ஒரு சில நாட்களில் நடவடிக்கை எடுக்கும்.
தொடர்ந்து மீனவர்கள் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாதவர்கள், விஜய் திரைப்படங்களுக்கு நெருக்கடி கொடுத்த இந்த இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தலில் ஆதரவு இல்லை.
விஜய் ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் நோட்டவிற்கு வாக்களிக்க உள்ளோம். ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் எங்கள் ஆதரவு வாக்காளர்கள் உள்ளளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.