ரஜினியுடன் இவங்கெல்லாம் சேருவாங்க..அவர் நட்டாற்றில் நிற்பார்- கார்த்தி சிதம்ப்ரம் ட்விஸ்ட் 'ட்வீட்'
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குதான் நெருக்கடி என்று காங்கிரஸ் லோக்சபா எம்.பி. கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பதிவை ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனவரி மாதம் கட்சி தொடங்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.
ரஜினிகாந்தின் அரசியல் வருகையை முன்வைத்து பல விவாதங்கள் நடைபெருகின்றன. திமுக, அதிமுகவின் வாக்கு வங்கிகளை ரஜினி அரசியல் வருகை பாதிக்குமா? பாதிக்காதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் லோக்சபா எம்.பி. கார்த்தி சிதம்பரம், ரஜினியின் அரசியல் வருகை தொடர்பாக என்னுடைய அரசியல் கணிப்பு என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
Won’t be surprised if @rajinikanth aligns with @OfficeOfOPS & @BJP4India. Perhaps plan is to block the Two Leaves symbol of @AIADMKOfficial by engineering a split, leaving @CMOTamilNadu in limbo. Will have to watch to see if @TTVDhinakaran aligns with EPS.
— Karti P Chidambaram (@KartiPC) December 3, 2020
@rajinikanth @BJP4India மற்றும் @OfficeOfOPS உடன் கூட்டணி அமைத்து @AIADMKOfficial சின்னமான இரட்டை இலையை முடக்கி @EPSTamilNadu யை அந்தரத்தில் விட்டுவிடுவார்கள்.
இதற்கு சசிகலா, @TTVDhinakaran என்ன செய்ய போகிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் கார்த்தி சிதம்பரத்தின் இந்தபதிவு விவாதமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.