கருணாநிதி 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று - ட்விட்டரில் அஞ்சலி செலுத்திய குஷ்பு
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை: திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அவரது மறைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் பலரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதி உடன் அவர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நன்றியுடன் நினைவு கூர்கிறேன் என்று பதிவிட்டுள்ள கருணாநிதிக்கு தான் பொன்னாடை போர்த்திய போது எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு நினைவு கூர்ந்திருக்கிறார்.
பலாத்காரம் செஞ்சுடுவேன் என மிரட்டும் நபர்.. போன் நம்பரை குறிப்பிட்டு குஷ்பு போலீசில் புகார்
சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் பிரபலமாக இருந்த போதே திமுகவில் இணைந்த குஷ்பு, தேர்தலில் திமுகவிற்காக பிரசாரம் செய்தார். சில கருத்து மோதல்களால் திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் கட்சி பேதமின்றி அனைத்து கருத்துக்களையும் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார் குஷ்பு. கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் இன்றைய தினம் தனது முன்னாள் தலைவர் உடனான நினைவுகளை நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார்.