எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுக… பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி கடிதம்
Recommended Video
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயரை வைத்திருப்பது போல எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயர் சூட்டப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் இந்த கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சென்னை வண்டலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.
வீட்டிலேயே ஜாலியா வேலை பாருங்க.. இந்தா பிடிங்க ஸ்மார்ட் போன், லேப்டாப்.. அசத்தப் போகும் மத்திய அரசு!
இந்த நிலையில், சென்னையின் மற்றுமோர் அடையாளமான எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்னாள் திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் பெயரை சூட்டவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுகவில் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனிக்கட்சி தொடங்க மு.க. அழகிரி தயாரானார். ஆனால் அந்த முயற்சியும் கைகூடவில்லை என கூறப்படுகிறது . நேற்று விருதுநகரில் திமுக தென் மண்டல மாநாடு நடைபெற்ற அதே நேரத்தில், மு .க. அழகிரி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருப்பது மீண்டும் அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது.